சுண்டு



ஓவியர்:வி. அகல்யா, 1ஆம் வகுப்பு

ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவளானாலும் பிற குழந்தைகள் வரையும்போது உடனிருந்து வரைந்தால் ஓவியம் நன்றாக வரும் என்பதை இன்னும் உணராத இக்குழந்தை மும்முரமாக வேறு பணி செய்துகொண்டிருக்கும் நேரத்தில் காகிதம், அட்டை, பென்சில் சகிதம், "மாமா, டிராயிங் வரையட்டுமா?" என்று கேட்டு வருவாள். சந்தர்ப்பம் சரியில்லாததால் நாளைக்கு வரையலாம் என்று சொல்வேன், ஆனால் நாளை வருவதில்லை அவளும் வரமாட்டாள். இவள் இதுவரை வரைந்த ஒரே ஓவியம் சுண்டுதான். பைன்ட் மென்பொருள் கொண்டு இவள் வரைந்த பென்சில் ஓவியத்துக்கு வண்ணம் தரப்பட்டுள்ளது. இவள் கூடவே 2 வயதுச் சிறுமியான இவளது தங்கையொருத்தி, "மாமா, நானும் ஆயிங் அய ஓயேன் (நானும் டிராயிங் வரையப்போறேன்)' என்று வந்து காகிதத்தில் தன் கிறுக்கல்களை இட்டுக் கொடுத்துவிடுவாள். பொழுது நன்றாகப் போகிறது

வினைதீர்க்கும் வேழமுகத்தோன்

இறைவடிவத்தை ஏட்டில் வடிக்கும் சிறுவன்



ஒவியர்: S. தினேஷ், 8ஆம் வகுப்பு

இந்த மழலைச் சிறுவன் பென்சிலைக் கொண்டே பல தெய்வ உருவங்களைத் தத்ரூபமாக வரையும் திறன் பெற்றவன். இவனது தந்தை காஞ்சீபுரத்தில் ஒரு ஆலயத்தில் அர்ச்சகராகப் பணி புரிகிறார். படிப்பிலும் இச்சிறுவன் சிறந்து விளங்குகிறான். தன் ஓய்வு நேரத்தை ஆக்கபூர்வமாக அழகு ஓவியங்கள் தீட்டுவதில் செலவிடும் இவன் எதிர்காலத்தில் இரவிவர்மாவைப் போன்ற ஒரு சிறந்த ஓவிய மேதையாவதற்கு வாய்ப்புள்ளது.

அம்மா

பிஞ்சு விரல்கள் - விஞ்சும் திறன்



ஓவியர்: ஆ.ரா. ஐஷ்வர்யா
6ஆம் வகுப்பு


g>இச்சிறுமி தன் பிஞ்சு விரல்களால் பல விந்தைகள் புரிபவள். ஓவியம் வரைவதில் இவளுக்கு மிக்க ஈடுபாடு இருப்பினும் பரதக் கலையில் இவளுக்கு அதிக நாட்டமிருப்பதால் ஓவியம் வரைவதில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஆனாலும் ஓவியம் வரைய ஆரம்பித்தால் அற்புதமான கலை வண்ணங்களை உருவாக்குகிறாள். இவளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

மழலைஸ் ஓவியக் கலைஞர்கள்

கலைகளிலே..



ஓவியங்கள் அழகு,

குழந்தைகள் அதைவிட அழகு

குழந்தைகள் வரைந்த ஓவியங்களென்றால்..

கொள்ளை அழகு



ஓவியர்: வி. வ்ருஷின் விக்னேஷ், 1ஆம் வகுப்பு

இம்மழலைகச் சிறுவன் மிகுந்த சுறுசுறுப்புடையவன். இவன் பென்சிலால் வரைந்த விநாயகருக்கு ஒரு கண் மட்டுமே உண்டு. இவன் வரைந்த அவ்வோவியத்தை கணினியில் ஸ்கான் செய்து அதற்கு கணினியிலிருக்கும் பைன்ட் மென்பொருளைக்கொண்டு வண்ணம் தீட்டி. இவன் வரைந்த ஒரு கண்ணின் பிரதிபிம்பமாய் மறு கண்ணை வரைந்ததில் உருவானவர் தான் இவ்விநாயகர்.
விநாயகரின் கண்ணில் தோன்றும் ஒளியைக் கவனியுங்கள். இவ்வோவியத்தை வரைந்த கை சாதாரணமான கையன்று. இச்சிறுவன் உலககையே படைத்த பிரம்மாவைப் போன்ற திறனுடையவன். எதிர்காலத்தில் இவன் ஒரு பெரிய கலைஞனாக மிளிர்வது திண்ணம்.